மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

மெக்ஸிகோவின் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :25 மே 2022, 10:31 am

DIN

மெக்ஸிகோவின் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

செலாயா நகரில் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் செவ்வாயன்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. முகக்கவசம் அணிந்திருந்த நிலையில் 15 பேர் துப்பாக்கி ஏந்தி மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். இவர்களில் சிலர் மொலோடோவ் காக்டெய்ல் பார்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில், 8 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குற்றம் நடந்த காட்சியின் கிராஃபிக் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின்படி, கொலையாளிகள் சாண்டா ரோசா டி லிமா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று பரிந்துரைக்கின்றன. 

பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, மெக்ஸிகோவின் தேசிய காவலர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், குவானாஜுவாடோ மாநில பாதுகாப்புப் படையினருடன் இணைந்து துப்பாக்கி ஏந்தியவர்களைத் தேடி வருகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் மெக்சிகோவில் குவானாஜுவாடோ நகரம் மிகவும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.