தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

மெக்ஸிகோவின் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :25 மே 2022, 4:01 pm IST

மெக்ஸிகோவின் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

செலாயா நகரில் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் செவ்வாயன்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. முகக்கவசம் அணிந்திருந்த நிலையில் 15 பேர் துப்பாக்கி ஏந்தி மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். இவர்களில் சிலர் மொலோடோவ் காக்டெய்ல் பார்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில், 8 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குற்றம் நடந்த காட்சியின் கிராஃபிக் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின்படி, கொலையாளிகள் சாண்டா ரோசா டி லிமா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று பரிந்துரைக்கின்றன. 

பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, மெக்ஸிகோவின் தேசிய காவலர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், குவானாஜுவாடோ மாநில பாதுகாப்புப் படையினருடன் இணைந்து துப்பாக்கி ஏந்தியவர்களைத் தேடி வருகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் மெக்சிகோவில் குவானாஜுவாடோ நகரம் மிகவும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.