தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வருமான வரி கணக்கு: இதுவரை 6.85 கோடி போ் தாக்கல்

2022-23 நிதியாண்டில் இதுவரை 6.85 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2022, 7:37 pm

DIN

2022-23 நிதியாண்டில் இதுவரை 6.85 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

2021-22 நிதியாண்டுக்கான தனிநபா் வருமான வரியைத் தாக்கல் செய்வது கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பெருநிறுவனங்கள் மற்றும் கணக்கை தணிக்கை செய்ய விரும்புவோருக்கு நவம்பா் 7-ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இறுதி நாள்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறியோா், வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை அபராதத் தொகையைச் செலுத்தி கணக்கை தாக்கல் செய்ய இயலும்.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா கூறுகையில், ‘ இது வரை 6.85 போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனா். இந்த எண்ணிக்கை வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அதிகரிக்கும்’ எனக் கூறினாா்.

நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டில், 7.14 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனா். இது அதற்கு முந்தைய நிதியாண்டான 2020-21-இல் தாக்கல் செய்யப்பட்டதைவிட அதிகமாகும். 2020-21-இல் 6.97 போ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனா்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோருக்கு நிகழாண்டில் ரூ. 2 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.