மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
முதல்வர் பகவந்த் மான்
முதல்வர் பகவந்த் மான்
Updated on
1 min read

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. 

இதனிடையே கைவிடப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மாநில அரசு ஊழியா்களும் முக்கிய கோரிக்கையாக வைத்து வந்தனா். இந்த நிலையில் பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வா் பகவந்த் மான் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com