உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 67 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். 67 பேர் காயமடைந்தனர். 
உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 67 பேர் காயம்!
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். 67 பேர் காயமடைந்தனர். 

தனியார் பேருந்து மௌங்கிரி கோர் கலியிலிருந்து உதம்பூர் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்து கிரிமாச்சி-மன்சார் சென்றடைந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

வாகனம் கவிழ்ந்து 40 அடி கீழே உருண்டதில் ஒரு பயணி உயிரிழந்தார். மேலும் 67 பேர் காயமடைந்தனர். 

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்குச் செல்வோர் உள்பட காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com