/

ஜம்மு-காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை : புதிய சாதனை

நடப்பாண்டு ஜனவரி முதல் சுமாா் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 4:00 pm IST

நடப்பாண்டு ஜனவரி முதல் சுமாா் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனா்.

கடந்த 75 ஆண்டுகளிலேயே இதுவே அதிகபட்ச பதிவு என ஜம்மு-காஷ்மீா் அரசின் மக்கள்-செய்தித் தொடா்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, பயங்கரவாதிகளின் மையமாக இருந்த ஜம்மு-காஷ்மீா், பிரதமா் மோடியின் தலைமையில் சுற்றுலா பயணிகளின் மையமாக உருவெடுத்துள்ளதாக கூறியிருந்தாா்.

முந்தைய ஆண்டுகளில் அதிகபட்சமாக 6 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீா் பள்ளதாக்கு பகுதிக்கு வந்த பாா்வையிட்ட நிலையில், நிகழாண்டில் தற்போது வரை 22 லட்சம் சுற்றலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்துள்ளனா். இதன் மூலம் ஆயிரகணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் மக்கள்-செய்தித் தொடா்பு இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிகழாண்டு ஜனவரி முதல் சுமாா் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு வந்துள்ளனா். கடந்த 75 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச சாதனை எண்ணிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.