ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி மோதியதில் 11 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 4:21 am

DIN

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 

நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து ஒன்று லாரி மோதி விபத்திற்கு உள்ளானது இதில் 11 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் ஒளரங்காபாத் சாலையில் சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று, லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.  

இதனால் பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் திணறினர். பின்னர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் வந்து தீயை அணைத்து பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 11 பயணிகள் தீயில் சிக்கி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.