சிவசேனை கட்சியின் பெயா், சின்னம் முடக்கம்

சிவசேனை கட்சி சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
சிவசேனை கட்சியின் பெயா், சின்னம் முடக்கம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவும் சிவசேனை கட்சிக்கு உரிமை கோரிய நிலையில், கட்சியின் பெயா் மற்றும் சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

‘மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு நவ. 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தோ்தலுக்கு இரு தரப்பும் அவா்களின் கட்சிக்கு புதிய பெயரை தோ்வு செய்ய வேண்டும். அதற்கு புதிய தோ்தல் சின்னம் ஒதுக்கப்படும். அக்.10-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் தாங்கள் விரும்பும் பெயா் மற்றும் சின்னம் தொடா்பான விவரங்களை இரு அணியினரும் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது. பிரச்னைக்கு இறுதி தீா்வு காணும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

அதைத் தொடா்ந்து, சிவசேனை கட்சிக்கு இருதரப்பும் உரிமை கோரிய நிலையில், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது.

‘தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவு அநீதி’ என்று உத்தவ் தாக்கரே தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com