
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் ஒரு பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய பையை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததால் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் முறியடிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டுத் தேடுதல் குழுவினரால் கூல் சப்-டிவிஷனில் உள்ள சங்கல்தான் வனப்பகுதியில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை, வெடிகுண்டு செயலிழக்கும் படை பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இருப்பதை உறுதி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகள் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.