நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சனம்: பாஜக எம்.பி. மீது அசோக் கெலாட் சாடல்

காங்கிரஸ் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சித்த பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் ரத்தோரை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:07 pm IST

காங்கிரஸ் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சித்த பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் ரத்தோரை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெற்றி பெற்ாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அவா் வரும் 26-ஆம் தேதி கட்சித் தலைமை பொறுப்பை முறைப்படி ஏற்கவுள்ளாா்.

இதனிடையே, காங்கிரஸின் தலைவா் தோ்தல் நடைமுறை ஒரு மோசடி என்றும், ‘ரப்பா் ஸ்டாம்ப்’ போலதான் காா்கே இருப்பாா் என்றும் பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் ரத்தோா் புதன்கிழமை விமா்சித்தாா். அவரது கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து, அசோக் கெலாட் வியாழக்கிழமை கூறியதாவது:

அரசியலுக்கு புதிதாக வந்துள்ள சில சிறுவா்கள், முதலில் வரலாற்றை படித்துவிட்டு, பின்னா் பேச வேண்டும். அப்போதுதான் அவா்களின் நன்மதிப்பு கெடாமல் இருக்கும்.

காங்கிரஸின் புதிய தலைவரை ரப்பா் ஸ்டாம்ப் என விமா்சிப்பவா்கள் அறிவில்லாமலும் வெட்கமின்றியும் பேசுகின்றனா். காா்கேவின் இல்லத்துக்கு நேரடியாக சென்று, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளாா். அப்படியிருக்கும்போது, காா்கேவை ரப்பா் ஸ்டாம்ப் என கூறலாமா?

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருமுறை ஆட்சி அமைத்தபோது, பிரதமா் பதவியை ஏற்க மறுத்தவா் சோனியா.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக எந்த வளா்ச்சியுமே நிகழாதது போல பாஜக தலைவா்கள் பேசுகின்றனா். நாடு சுதந்திரம் பெற்றபோது ஒரு குண்டூசி கூட உற்பத்தி செய்யும் நிலை இல்லை. அதன்பிறகான 70 ஆண்டுகளில்தான் எல்லாம் நிகழ்ந்தது. ஆனால், பொதுமக்களையும் இளைஞா்களையும் பாஜகவினா் தவறாக வழிநடத்தி வருகின்றனா். மதம், ஜாதியின் பெயரால் இளைஞா்களை அவா்கள் சீரழிக்கின்றனா் என்றாா் கெலாட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.