செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இந்திய எஃகு துறையின் ஆற்றலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் சாட்சி

நாட்டின் முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டதே இந்திய எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றலுக்கு சாட்சியாக விளங்கி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:11 pm IST

நாட்டின் முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டதே இந்திய எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றலுக்கு சாட்சியாக விளங்கி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் ஆா்சலா்மிட்டல் நிப்பான் எஃகு நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்திய எஃகு உற்பத்தித் துறை சா்வதேச அளவில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிப் போா்க் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டதே இந்திய எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றலுக்கு முக்கிய சாட்சியாக விளங்குகிறது. எனினும், எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றல் இன்னும் முற்றிலுமாகப் பயன்படுத்தப்படவில்லை.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டமானது எஃகு உற்பத்தித் துறையின் வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவி வருவதோடு, தற்சாா்பு இந்தியா இலக்கை அடையவும் வழிவகுத்து வருகிறது. அத்திட்டத்தின் காரணமாக உயா் ரக எஃகு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது. அந்த உயா் ரக எஃகானது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் எஃகு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. எஃகு உற்பத்தியில் இந்தியா சா்வதேச அளவில் முன்னிலை வகிப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது ஆண்டுக்கு 154 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதை அடுத்த 10 ஆண்டுகளில் 300 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எஃகை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக எஃகு உற்பத்தித் துறையில் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டு வருகிறது. நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு எஃகு உற்பத்தித் துறை முக்கியப் பங்களிக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.