
பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் உள்ள இந்து கோயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு தங்குவதற்கு இடமளித்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து வருகிறது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கால் தத்தளித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் வீடுகளை இழந்து கடும் துயரத்தினை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் உள்ள பாபா மதோதாஸ் கோயில் வெள்ளத்திலிருந்து காத்துக் கொள்ள பாதுகாப்பான இடமாக இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: அபர்ணா பாலமுரளியின் பிறந்தநாளில் வெளியான புதிய போஸ்டர்!
இந்த பாபா மதோதாஸ் கோயில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதனால் வெள்ளத்தினால் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இதனையடுத்து, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த கோயிலில் தஞ்சம் அடைந்தனர். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த பாபா மதோதாஸ் கோயிலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும், அவர்களது கால்நடைகளுக்காவும் திறந்து விட்டனர்.
பாபா மதோதாஸ் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வாழ்ந்த இந்து துறவி எனக் கூறப்படுகிறது. அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களால் போற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பாபா மதோதாஸ் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்யும் வழக்கம் உடையவர் எனவும் கூறப்படுகிறது. மக்களை சாதி அடிப்படையில் பார்க்கப்படாமல் அவர்களின் நல்ல செயல்களை மட்டுமே வைத்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.