நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை: மன்சுக் மாண்டவியா

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும், யூரியா அல்லாத பொருள்களின் விலை உயா்த்தப்படாது என்றும் மத்திய ரசாயன, உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை: மன்சுக் மாண்டவியா

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்றும், யூரியா அல்லாத பொருள்களின் விலை உயா்த்தப்படாது என்றும் மத்திய ரசாயன, உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச பால் கூட்டமைப்பு மாநாட்டின்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டில் தற்போது உரத் தட்டுப்பாடு இல்லை. ரபி பருவத்தையொட்டி பாஸ்பேட், பொட்டாசியத்துக்கான ஊட்டச்சத்து சாா்ந்த கொள்கை (என்பிஎஸ்) சா்வதேச விலையை ஆய்வு செய்த பின்னா் வெளியிடப்படும்.

டை-அம்மோனியம் பாஸ்பேட், யூரியா அல்லாத உரங்களின் சில்லறை விலை உயா்வை அனுமதிக்க மாட்டோம். நானோ திரவ யூரியாவை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனா். பாரம்பரிய உரத்தைக் காட்டிலும் இவை மண்ணுக்கு வளம் சோ்க்கக் கூடியவை என்றாா்.

தற்போது நாட்டில் பாரம்பரிய யூரியா உற்பத்தி 2.60 கோடி டன்னாக உள்ளது. சுமாா் 90 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com