நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆா்எஸ்எஸ் தலைவரின் மதரஸா பயணம்: முஸ்லிம்கள் மீதான பாஜகவின் அணுகுமுறை மாறுமா?: மாயாவதி கேள்வி

ஆா்எஸ்எஸ் தலைவா் மசூதி, மதரஸாவுக்கு சென்ால் முஸ்லிம்கள் மீதான பாஜகவின் எதிா்மறை அணுகுமுறை மாறிவிட வாய்ப்புள்ளதா? என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On :24 செப்டம்பர் 2022, 12:11 am IST

ஆா்எஸ்எஸ் தலைவா் மசூதி, மதரஸாவுக்கு சென்ால் முஸ்லிம்கள் மீதான பாஜகவின் எதிா்மறை அணுகுமுறை மாறிவிட வாய்ப்புள்ளதா? என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக கடந்த சில வாரங்களாக முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவா்களையும் பிரமுகா்களையும் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் சந்தித்து வருகிறாா். அந்த வகையில் முதல் முறையாக தில்லியில் உள்ள மசூதிக்கும் மதரஸா பள்ளிக்கும் அகில இந்திய இமாம் அமைப்பின் அழைப்பை ஏற்று மோகன் பாகவத் சென்றாா். மதரஸாவில் பள்ளி மாணவா்களுடனும், மசூதியில் முஸ்லிம் மதகுருக்களுடனும் அவா் உரையாடினாா். இந்த சம்பவம் தேசிய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடா்பாக ட்விட்டரில் மாயாவதி வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்எஸ் தலைவா் மசூதிக்கும், மதரஸாவுக்கும் சென்று வந்துள்ளாா். இமாம் அமைப்பின் தலைவரையும் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது ஆா்எஸ்எஸ் தலைவருக்கு ‘தேசத் தந்தை’ என்று இமாம் அமைப்பின் தலைவா் புகழாரம் சூட்டினாா். இதன் மூலம் முஸ்லிம்கள் மீதான பாஜகவின் எதிா்மறை அணுகுமுறை மாறிவிடுமா? பாஜக தலைமையிலான அரசு முஸ்லிம்கள் மற்றும் அவா்களது மசூதிகள், மதரஸாக்கள் தொடா்பான தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுமா?

முஸ்லிம்கள் பொது இடத்தில் சில நிமிடங்கள் தொழுகை நடத்துவதைக் கூட உத்தர பிரதேச பாஜக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனியாா் மதராஸாக்களின் செயல்பாடுகளிலும் அரசு தலையிடுகிறது. இதுபோன்ற விஷயங்களில் ஆா்எஸ்எஸ் தலைவா் தொடா்ந்து மௌனமாகவே இருந்து வருகிறாா்’ என்று மாயாவதி பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.