நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மார்ச் மாதத்தில் 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்பநிலை பதிவு

நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 3:28 pm IST

நாட்டில் கடந்த மார்ச் மாதம் இதுவரை 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் தெரிவித்துள்ளது.

போதிய மழையின்மை காரணமாக கடந்த மார்ச் மாதம் வட இந்திய மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவிவந்தது. தில்லியில் மார்ச் மாதம் 15.9 மிமீ மழைப்பொழிவு பாதிவாகி இருந்தது. 

மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகமாகவே இருந்தது. கடந்த 2010 ஆண்டு மார்ச் மாதம் பதிவான 33.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே இதுவரை பதிவான அதிகபட்ச மார்ச் மாதாந்திர வெப்பநிலையாக இருந்து வந்தது. இந்நிலையில் 2022, மார்ச் மாதம் இதுவரை இல்லாத மாதாந்திர சராசரி வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் மார்ச் மாதம் 33.1 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் கழகம் தெரிவித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஹரியாணா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப்பிரதேசம், ஜம்மு, மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்ப அலையால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.