குஜராத்தின் பூஜ் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஹராமி நல்லா பகுதியில் ஞாயிறு இரவு 8.30 மணியளவில் இந்திய எல்லைக்குள் 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் மற்றும் 5 பாகிஸ்தான் மீனவர்கள் நடமாடுவதை ரோந்துப் பிரிவினர் கவனித்ததாகத் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் அவர்களை துரத்திச் சென்று இந்திய எல்லைக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு பாகிஸ்தானிய மீன்பிடி படகைக் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட படகில் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. அதில் சில மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைத் தவிர சந்தேகத்திற்குரிய எதுவும் படகில் இல்லை.
அப்பகுதியில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட தனித்தனி ரோந்து நடவடிக்கைகளில் 18 பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை பிஎஸ்எப் கைப்பற்றியுள்ளது.