பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று நிறைவடைகிறது

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமையுடன் (ஏப். 7) நிறைவுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று நிறைவடைகிறது

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமையுடன் (ஏப். 7) நிறைவுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே நிறைவுபெற உள்ளதாகவும், அதன்படி மக்களவையும், மாநிலங்களவையும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் எனவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31-ஆம் தொடங்கி, பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னா் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-இல் நிறைவடைந்தது. அதன்பின்னா், துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளை ஆராய இடைவெளி விடப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மாா்ச் 14-இல் தொடங்கியது. ஏப்ரல் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கூட்டத்தொடா் நடைபெறும் என அட்டவணைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையுடன் நிறைவுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் தில்லி மாநகராட்சி திருத்த மசோதா, குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com