ஜார்கண்ட் ரோப் கார்கள் விபத்தில் சிக்கிய குழந்தையை அந்திரத்தில் தொங்கியபடி விமானப்படையினர் மீட்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் திரிகூட் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 2 ரோப் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், அனைத்து ரோப் காா்களும் நடு வழியில் அந்தரத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் நின்று விட்டன.
2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியை துரிதப்படுத்தினா். இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 100 அடி உயரத்தில், அந்திரத்தில் தொங்கியபடி விமானப்படை வீரர் ஒருவர் குழந்தை மற்றும் பெற்றோரை மீட்கும் காணொலியை இந்திய விமானப்படை டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.