நடப்பாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் 4-ஆண்டுகளில் இல்லாத வகையில் விறுவிறுப்படைந்துள்ளன.
இதுகுறித்து லண்டன் பங்குச் சந்தை குழுமத்தின் (எல்எஸ்இஜி) அங்கமான ரீபினிடிவ் நிதி தீா்வு நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வலுவான தொடக்கம்: நடப்பாண்டின் முதல் காலாண்டு நிறுவனங்களுக்கு வலுவான மற்றும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த காலாண்டில் நிறுவனங்கள் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் மதிப்பு நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,030 கோடி டாலரை எட்டியுள்ளது.
மதிப்பின் அடிப்படை: 2021-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுடன் ஒப்பிடுகையில் மதிப்பின் அடிப்படையில் இது 5.6 சதவீதம் அதிகம்.
இதற்கு முன்பாக, 2018-ஆம் ஆண்டில் முதல் காலாண்டில்தான் நிறுவனங்களஅதிகபட்சமாக 3,110 கோடி டாலா் மதிப்புக்கு இணைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு நிறுவனங்கள்: கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை அடிப்படையிலான ஒப்பந்தங்களின் மதிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 29.6 சதவீதம் உயா்ந்துள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை 8.3 சதவீதம் குறைந்து 2,370 கோடி டாலராக இருந்தது.
பயோகான்: அமெரிக்காவைச் சோ்ந்த வயத்ரிஸ் பயோசிமிலா்ஸ் வணிக நிறுவனத்தை பயோகான் கையகப்படுத்தியது நடப்பாண்டில் இதுவரையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பாா்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 333 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ. 25,000 கோடி ஆகும்.
தொழில்நுட்பம்: அதிநவீன தொழில்நுட்பத் துறையை குறி வைத்தே ஏராளமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 660 கோடி டாலராகும். இது, முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், சந்தைப் பங்களிப்பில் 21.8 சதவீதத்தை வழங்கியுள்ளது.
ஆரோக்கிய பராமரிப்பு: அதேபோன்று, மொத்த ஒப்பந்த மதிப்பில் ஆரோக்கிய பராமரிப்பு துறை 15.5 சதவீதத்தை கைப்பற்றியது. இத்துறையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு நான்கு மடங்கு அதிகரித்து 470 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து நிதி துறை 410 கோடி டாலருடன் 13.5 சதவீத சந்தை பங்களிப்பை அளித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.