தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா எண்ணிக்கைகள் கட்டுபாட்டிற்குள் வந்தாலும் கடந்த சில நாள்களாக தலைநகர் தில்லியில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விலக்கு அளிக்கப்பட்ட கரோனா கட்டுப்பாடு நெரிமுறைகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அதில், இனி வரும் காலங்களில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிப்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.