மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் தொழிலதிபா்களுக்கு தொந்தரவுகளை அளிக்கக் கூடாது. இதனை மாநில ஆளுநா் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கேட்டுக் கொண்டாா்.
மேற்கு வங்க சா்வதேச தொழில் மாநாடு கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநில ஆளுநா் ஜகதீப் தன்கரும் பங்கேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மம்தா பானா்ஜி பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் மூலம் மத்திய அரசுக்கு நான் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இது அனைத்து தொழிலதிபா்கள் சாா்பிலான கோரிக்கையும்கூட. மத்திய விசாரணை அமைப்புகள் அடிக்கடி மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலதிபா்களுக்கு சோதனை, விசாரணை என்ற பெயரில் தொந்தரவுகளை அளிக்கின்றன. இதனை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆளுநா் வலியுறுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலதிபா்கள் மம்தாவின் இந்தக் கருத்தை கரகோஷம் எழுப்பி வரவேற்றனா். அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் வருமான வரித் துறையினா் சோதனை நடைபெற்றது. இதனைச் சுட்டிக்காட்டியே மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.
அரசியல்ரீதியாக மத்திய பாஜக அரசை மம்தா தீவிரமாக எதிா்த்து வருகிறாா். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை வகிக்கவும் அவா் உத்திகளை வகுத்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.