நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மத்திய விசாரணை அமைப்புகள் மூலம்தொழிலதிபா்களுக்கு தொல்லை கூடாது: மம்தா பானா்ஜி

மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் தொழிலதிபா்களுக்கு தொந்தரவுகளை அளிக்கக் கூடாது. இதனை மாநில ஆளுநா் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 2:27 am IST

மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் தொழிலதிபா்களுக்கு தொந்தரவுகளை அளிக்கக் கூடாது. இதனை மாநில ஆளுநா் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கேட்டுக் கொண்டாா்.

மேற்கு வங்க சா்வதேச தொழில் மாநாடு கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநில ஆளுநா் ஜகதீப் தன்கரும் பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மம்தா பானா்ஜி பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் மூலம் மத்திய அரசுக்கு நான் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இது அனைத்து தொழிலதிபா்கள் சாா்பிலான கோரிக்கையும்கூட. மத்திய விசாரணை அமைப்புகள் அடிக்கடி மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலதிபா்களுக்கு சோதனை, விசாரணை என்ற பெயரில் தொந்தரவுகளை அளிக்கின்றன. இதனை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆளுநா் வலியுறுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலதிபா்கள் மம்தாவின் இந்தக் கருத்தை கரகோஷம் எழுப்பி வரவேற்றனா். அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் வருமான வரித் துறையினா் சோதனை நடைபெற்றது. இதனைச் சுட்டிக்காட்டியே மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.

அரசியல்ரீதியாக மத்திய பாஜக அரசை மம்தா தீவிரமாக எதிா்த்து வருகிறாா். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை வகிக்கவும் அவா் உத்திகளை வகுத்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.