விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..

நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

News image

தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..

Updated On :23 ஏப்ரல் 2022, 7:16 am

DIN

புது தில்லி: நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதாவது, புது தில்லியின் 'ஆர்' மதிப்பு 2.1 ஆக உள்ளது. இதன் மூலம், தில்லியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படும் போது, அவர் மூலம் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதாக ஐஐடி சென்னை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒருவருக்கு கரோனா பாதிக்கப்பட்டால், அவர் மூலமாக எத்தனை பேருக்கு கரோனா பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் 'ஆர்' மதிப்பு. இந்த 'ஆர்' மதிப்பானது ஒன்றுக்கும் கீழே குறையும் போதுதான் கரோனா பேரிடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பகிரப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியின் இந்த வார 'ஆர்' மதிப்பானது 2.1 ஆக உள்ளது. அதே வேளையில், நாட்டின் 'ஆர்' மதிப்பானது தற்போது 1.3 ஆக உள்ளது.

இதன் மூலம் தில்லியில் நான்காவது அலை தாக்கக் கூடுமா என்று கேட்டால், நான்காவது அலை உருவாவது குறித்து தற்போது கணிக்க இயலாது என்பதே பதிலாக உள்ளது.

இதில் குறிப்பாக ஒன்றைத்தான் அறிய வேண்டியுள்ளது, அதாவது, தற்போதைக்கு ஒருவருக்கு கரோனா பாதித்தால் அவர் மூலம் 2 பேருக்கு கரோனா பாதிக்கிறது. ஆனால், மூன்றாவது அலையின் போது கரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கரோனா பாதிக்கிறதா அல்லது பாதிக்கவில்லையா என்பதைத்தான் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களைக் காட்டிலும் தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை 1,042 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா உறுதியாகும் விகிதம் 4.64 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.