புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..

நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

News image

தில்லியின் 'ஆர்' மதிப்பு என்ன சொல்கிறது? ஒருவருக்கு பாதித்தால் அது..

Updated On :23 ஏப்ரல் 2022, 12:46 pm IST

புது தில்லி: நாட்டின் தலைநகர் புது தில்லியில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் 'ஆர்' மதிப்பு தரும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதாவது, புது தில்லியின் 'ஆர்' மதிப்பு 2.1 ஆக உள்ளது. இதன் மூலம், தில்லியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படும் போது, அவர் மூலம் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதாக ஐஐடி சென்னை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒருவருக்கு கரோனா பாதிக்கப்பட்டால், அவர் மூலமாக எத்தனை பேருக்கு கரோனா பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் 'ஆர்' மதிப்பு. இந்த 'ஆர்' மதிப்பானது ஒன்றுக்கும் கீழே குறையும் போதுதான் கரோனா பேரிடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பகிரப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியின் இந்த வார 'ஆர்' மதிப்பானது 2.1 ஆக உள்ளது. அதே வேளையில், நாட்டின் 'ஆர்' மதிப்பானது தற்போது 1.3 ஆக உள்ளது.

இதன் மூலம் தில்லியில் நான்காவது அலை தாக்கக் கூடுமா என்று கேட்டால், நான்காவது அலை உருவாவது குறித்து தற்போது கணிக்க இயலாது என்பதே பதிலாக உள்ளது.

இதில் குறிப்பாக ஒன்றைத்தான் அறிய வேண்டியுள்ளது, அதாவது, தற்போதைக்கு ஒருவருக்கு கரோனா பாதித்தால் அவர் மூலம் 2 பேருக்கு கரோனா பாதிக்கிறது. ஆனால், மூன்றாவது அலையின் போது கரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கரோனா பாதிக்கிறதா அல்லது பாதிக்கவில்லையா என்பதைத்தான் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களைக் காட்டிலும் தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை 1,042 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா உறுதியாகும் விகிதம் 4.64 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.