தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

மகாராஷ்டிர எம்.பி. நவ்நீத் ராணாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

மகாரஷ்டிர எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 5:38 pm IST

மகாரஷ்டிர எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேயின் வீட்டின் முன்பாக ஹனுமன் மந்திரம் (சாலீசா) ஓதப்போவதாக சவால் விடுத்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா, அவருடைய மனைவியும் சுயேச்சை எம்.பி.யுமான நவ்நீத் ராணாவுடன் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டாா்.

ஹனுமன் மந்திரம் ஓதும் திட்டத்தைக் கைவிடுவதாக ராணா தம்பதி அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில், வேறுபட்ட சமூக, மொழி பிரிவினரிடையே பகைமையைத் தூண்டும் குற்றத்துக்கான சட்டப் பிரிவு 153ஏ, காவல் துறையின் தடை உத்தரவை மீறுதல் குற்றத்துக்கான சட்டப் பிரிவு 135 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். 

இந்த நிலையில் கைதான இருவரும் பாந்த்ராவில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து பாந்த்ரா விடுமுறை கால நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேசமயம் இருவரின் ஜாமீன் மனு ஏப்ரல் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​எம்.எல்.ஏ ரவி ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் மீது அவர்கள் பொய்யான குற்றத்தைப் பதிவு செய்துள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.