ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது.
புல்வாமாவின் மித்ரிகாம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது என்றார்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தனர்.