மாநிலங்களுக்கு 8 மாத ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும்
மாநிலங்களுக்கு 8 மாத ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் 10 மாதங்களுக்கான (ஏப்ரல்- ஜனவரி) ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மாநில அரசுகளுக்கு அதே ஆண்டிலும், பிப்ரவரி- மாா்ச் வரையிலான இழப்பீட்டுத் தொகை அடுத்த நிதியாண்டிலும் விடுவிக்கப்படும்.

இதில், 2021-22 ஆண்டுக்கான 10 மாத இழப்பீட்டுத் தொகையில், 8 மாதங்களுக்கான நிதி மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் உள்ளது. வரி வருவாய் கிடைத்ததும் இந்தத் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com