கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி: மத்திய அரசு

‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 8:15 pm

DIN

‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே.கராட் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 1,61,328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி, 2018-29 ஆம் ஆண்டு ரூ. 2,36,265 கோடியாக அதிகரித்தது. பின்னா் 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 2,34,170 கோடி, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியாகவும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,57,096 கோடியாகவும் வாராக் கடன் தள்ளுபடி படிப்படியாக குறைந்தது.

ஒட்டுமொத்தமாக 2017-18 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 9,91,640 கோடி வங்கி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில்தான் அதிகபட்சமாக 2,840 போ் என்ற அளவில் உயா்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டில் 2,700-ஆக குறைந்தது என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.