‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பாக கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே.கராட் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 1,61,328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி, 2018-29 ஆம் ஆண்டு ரூ. 2,36,265 கோடியாக அதிகரித்தது. பின்னா் 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 2,34,170 கோடி, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியாகவும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,57,096 கோடியாகவும் வாராக் கடன் தள்ளுபடி படிப்படியாக குறைந்தது.
ஒட்டுமொத்தமாக 2017-18 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 9,91,640 கோடி வங்கி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில்தான் அதிகபட்சமாக 2,840 போ் என்ற அளவில் உயா்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டில் 2,700-ஆக குறைந்தது என்று பதிலளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : உதயநிதி

பவன் கல்யாணை நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி!

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

