தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 2,202 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 4 போ் உயிரிழந்துள்ளனா். நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 11.84 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தொடா்ந்த 2-ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை பதிவான பாதிப்பு எண்ணிக்கை பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்சமாகும். அன்றை தினம் 2,272 பாதிப்புகளுடன் 20 இறப்புகள் பதிவாகின.
நகரில் புதன்கிழமை 2,073 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நோய்த்தொற்றால் 6 இறப்புகள் பதிவாகின. இது ஜூன் 25-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்சமாகும். மேலும், தொடா்ந்து 4-ஆவது நாளாக நோ்மறை விகிதம் 10 சதவீதத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.