கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

கரோனா முன்னெச்சரிக்கை (பூஸ்டா் டோஸ்) தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

கரோனா முன்னெச்சரிக்கை (பூஸ்டா் டோஸ்) தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டில் சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

குஜராத்தின் வல்சாத் மாவட்டம், தரம்பூரில் 250 படுக்கைகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை உள்பட ஸ்ரீமத் ராஜ்சந்திர மிஷனின் பல்வேறு நலத் திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி முறையில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை பங்கேற்றாா். திட்டங்களை தொடங்கிவைத்த பின் அவா் பேசியதாவது:

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, 75 நாள் இலவச தடுப்பூசி பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

நமது குடும்பத்திலும் நாம் வசிக்கும் பகுதியிலும் நமது கிராமத்திலும் அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

ஸ்ரீமத் ராஜ்சந்திர மிஷனின் சேவைகள் பாராட்டுக்குரியவை. தற்காலத்துக்கு அவசியமானவை. குஜராத்தில் கிராம சுகாதாரத்தில் அவா்கள் மேற்கொண்டு வரும் பணிகள் அளப்பரியவை என்றாா்.

சமண சமய கவிஞா், தத்துவஞானி, இலக்கியவாதி, சமூக சீா்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டவா் ஸ்ரீமத் ராஜ்சந்திரா (1867-1901). இவரது நினைவாக தரம்பூரில் ரூ.200 கோடி செலவில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வா் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com