வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிப்பதை, புலியும் அமைதியான உண்டு சென்றது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தி அமேஸிங் டைகர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த விடியோவில், காட்டிற்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் சன்னல் வழியாக புலியை அழைக்கிறார்.
குச்சியில் கறித்துண்டை மாட்டி சன்னல் வழியாக நீட்டுகிறார். புலியும் அமைதியாக சன்னல் அருகே வந்து, கறித்துண்டை உண்டு செல்கிறது. இதனை பேருந்துக்குள் இருந்த மற்றொரு நபர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.