நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பதிக்குச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி

ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

News image

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி பலி

Updated On :8 ஆகஸ்ட் 2022, 7:09 am

DIN

ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து அமராவதி-அனந்தபூர் நெடுஞ்சாலையில் நடந்தது. பிரகாசம் மாவட்டத்தில் கம்பம் அருகே கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

மூன்று பெண்கள் உள்பட இறந்தவர்கள் மச்சர்லாவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இறந்தவர்கள் அனிமி ரெட்டி (60), குரவம்மா (60), ஆனந்தம்மா (55), ஆதிலட்சுமி (58), நாகி ரெட்டி (24) என அடையாளம் காணப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் பல்நாடு மாவட்டம் வேல்துருத்தி மண்டலத்தில் உள்ள சிரிகிரிபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்.

அதிவேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.