திருப்பதியில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி

திருப்பதியில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி

திருப்பதியில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள். 
Published on

திருப்பதியில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிரிகிபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடைய கார் அமராவதி-அனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாசவி பாலிடெக்னிக் அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது திடீரென மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குருவம்மா, அணிமிரெட்டி, அனந்தம்மா, ஆதிலட்சுமி, நாகிரெட்டி ஆகிய 5 பேர் பலியானார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com