எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிகாரில் அரசியல் மாற்றம்: சோனியாவை சந்திக்கிறார் நிதிஷ் குமார்?

பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image

பிகார் முதல்வர் நிதிஷ்குமார்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:31 pm IST

பிகாரில் அரசியல் மாற்றம் நிகழலாம் என்று உறுதியான குறிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அரசியல் மாற்றம் குறித்து, சோனியா காந்தியை ஞாயிற்றுக்கிழமை, நிதிஷ் குமார் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த உரையாடலின் போது எது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்பது வெளியாகவில்லை.

எனினும், இந்த பேச்சுவார்த்தையின்போது பிகாரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடலின் எதிரொலியாக, காங்கிரஸ் மாநில தலைவர் மதன் மோகன் ஜா மற்றும் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் அஜித் ஷர்மா ஆகியோர் சதாகத் ஆசிரமத்தில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பாட்னாவுக்கு விரையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ஜேடி எம்எல்ஏக்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கும், ஜேடி(யு) எம்எல்ஏக்களின் கூட்டம் 11 மணிக்கும் நடைபெறவிருக்கிறது. 

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற நிதிஷ் குமார் முடிவு செய்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை சோனியா காந்தியிடம் தொலைபேசியில் உரையாடியிருப்பது மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தியை நிதிஷ் குமார் யாதவ் விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே நேற்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தையும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்திருந்தார். இதற்கு முன்பு ஜூலை 17ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தையும் நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜேடியுவுடன் இணையும் பட்சத்தில் கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்படும். இதுதான் 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்திலும் நடந்தது. ஆனால், அதனை கடந்த ஜூன் மாதம் மீண்டும் மாற்றி, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.