தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பள்ளிகளை நடத்த ஆம் ஆத்மியின் ஆலோசனை தேவையில்லை: கோவா முதல்வர் பதிலடி

அரசு தொடக்கப் பள்ளிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளில் ஆலோசனையை விரும்பவில்லை என்று கோவா முதல்வர் ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

News image
பிரமோத் சாவந்த்
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:10 am

IANS

அரசு தொடக்கப் பள்ளிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளில் ஆலோசனையை விரும்பவில்லை என்று கோவா முதல்வர் ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

கோவாவில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் தில்லி மாதிரியைப் பயன்படுத்துவோம் என்று ஆம் ஆத்மி கூறியதற்கு முதல்வர் சாவந்த் பதிலளித்துள்ளார். 

அரசு தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுக்க முன்வந்த ஆம் ஆத்மி முதலில் அவர்களின் சொந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் நிலையைச் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மற்ற பள்ளிகளுடன் இணைக்க அரசு முயற்சித்து வருகிறது என்றார். 

கோவாவில் அரசுப் பள்ளிகளை நடத்தும் திறன் கொண்டது. கடந்த 60 ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளிகளை நடத்தி வருகிறது. 2012 முதல் 2022 வரை பாஜக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை என்று சாவந்த் கூறினார். 

பள்ளிகளை நடத்துவதற்கு எந்த அரசியல் கட்சியும் பொறுப்பேற்கத் தேவையில்லை. பள்ளியை நடத்தும் அளவுக்கு அரசுக்குத் திறமை உள்ளது. மாணவர்களின் கல்வியில் எங்களுக்கு அக்கறை உள்ளது. கட்டடம் கட்டுவதில் எங்களுக்கு அக்கறை இல்லை, ஆனால் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் எங்களுக்கு கவலை உள்ளது. 

புதிய கல்விக் கொள்ளை, கல்வித் தரம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அரசியல் கட்சிகள் எதையாவது பெரியதாகச் செய்ய வேண்டும் என்று காட்டக்கூடாது. நாங்கள் பள்ளிகளை நடத்தும் திறன் கொண்டுள்ளோம். 

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட அனைவரையும் நாங்கள் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்வோம். அவர்கள் மனதில் பீதியை உருவாக்க வேண்டாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.