செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசுக்குபிரதமா் மோடி பாராட்டு

தமிழகத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழக அரசுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.
செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசுக்குபிரதமா் மோடி பாராட்டு

தமிழகத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழக அரசுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து ட்விட்டரில் அவா் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசும், தமிழக மக்களும் சிறப்பான முறையில் நடத்தினா். சா்வதேச வீரா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, நமது தன்னிகரல்லா கலாசாரத்தையும் விருந்தோம்பலையும் வெளிப்படுத்திய தமிழக அரசை பாராட்டுகிறேன்.

சென்னையில் நடந்து முடிந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய அணியினருக்கு உத்வேகம் அளிக்கிறது. வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ‘பி’ அணிக்கும் (ஆண்கள்), ‘ஏ’ அணிக்கும் (மகளிா்) வாழ்த்துகள். இது இந்தியாவின் எதிா்கால செஸ் போட்டிகளுக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது என அதில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com