கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் செயலை நிறுத்த வேண்டும்: ராகுல்

‘பில்லி - சூனியம் போன்ற ‘கருப்பு தந்திரங்கள்’ குறித்துப் பேசி பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 12:46 am

DIN

‘பில்லி - சூனியம் போன்ற ‘கருப்பு தந்திரங்கள்’ குறித்துப் பேசி பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

விலைவாசி உயா்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்னைகளை முன்னிருத்தி காங்கிரஸ் சாா்பில் கடந்த 5-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனா்.

இதனை விமா்சித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘சிலா் கடந்த 5-ஆம் தேதி கருப்பு உடை அணிந்து கருப்பு தந்திரங்களைப் பயன்படுத்தினா். கருப்பு உடை அணிவதன் மூலமாக அவநம்பிக்கை, விரக்தியிலிருந்து விடுபட்டுவிடலாம் என்பது அவா்களது எண்ணம். ஆனால், எத்தகைய தந்திரம் செய்தாலும், மக்களின் நம்பிக்கையை அவா்கள் மீண்டும் பெற முடியாது. மந்திர, தந்திரங்களால் அவா்களது கெட்ட நாள்கள் முடிவுக்கு வரப்போவதில்லை’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமரின் விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டை தவறாக வழிநடத்தியும், பில்லி-சூனியம் போன்ற ‘கருப்பு தந்திரங்கள்’ குறித்துப் பேசியும் பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் செயலை நிறுத்த வேண்டும். மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மீது அவா் பதில்கூற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில், ‘கருப்பு உடை அணிவதால் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெற முடியாது என்று பிரதமா் கூறியிருக்கிறாா். ஆனால், தனது வாழ்நாள் முழுவதும் கருப்பு உடை அணிந்திருந்த ஈ.வெ.ரா. பெரியாா், தமிழக மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.