தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும்: பட்னாவிஸ் 

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2022, 7:13 am

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை தெரிவித்தார். 

பட்னாவிஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

பாஜக மகாராஷ்டிர பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் பவான்குலேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

புதிய அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் எனக் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.  

முதல்வராகப் பதவியேற்ற 41 நாள்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, இருகட்சிகளையும் சேர்ந்த தலா 9 அமைச்சர்கள் என 18 பேர் பதவியேற்றனர்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை,  அரசு விரைவில் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

ஜூலை மாதத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க மகாராஷ்டிர அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

தற்போதைய தேசிய பேரிடர் நிவாரண நிதி(என்டிஆர்எப் ) விதிமுறைகளின்படி, ஒரு விவசாயி ஹெக்டேர் ஒன்றுக்கு 6,800 ரூபாய் இழப்பீடாகப் பெறுகிறார். இந்தத் தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம் என்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.