முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகள் வருகை தாமதமாகிறது

இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், தென்ஆப்பிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து அவற்றை கொண்டுவருவது தாமதமாகியுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:25 am IST

இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், தென்ஆப்பிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து அவற்றை கொண்டுவருவது தாமதமாகியுள்ளது.

சுதந்திர தினத்துக்கு முன்பாக சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தென்ஆப்பிரிக்காவுடன் இன்னும் ஒப்பந்தம் கையொப்பம் ஆகாமல் உள்ளது; அதேபோல், நமீபியாவில் இருந்து வர வேண்டிய சிவிங்கிப் புலிகளின் தனிமைப்படுத்துதல் காலம் இன்னும் நிறைவடையவில்லை. இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பா் தொடக்கத்தில்தான் இக்காலம் நிறைவடையும். இதனால், சிவிங்கிப் புலிகள் இந்த மாதத்துக்குள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவில் சிவிங்கிப் புலி இனம் முற்றிலும் அழிந்துபோனதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது. இந்திய காடுகளில் அந்த இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, தென்ஆப்பிரிக்கா, நமீபியாவிலிருந்து கொண்டுவரப்படவிருக்கும் சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேச மாநிலம், சியோபூரில் உள்ள குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

உலக அளவில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.