கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகள் வருகை தாமதமாகிறது

இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், தென்ஆப்பிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து அவற்றை கொண்டுவருவது தாமதமாகியுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 2:55 am

DIN

இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், தென்ஆப்பிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து அவற்றை கொண்டுவருவது தாமதமாகியுள்ளது.

சுதந்திர தினத்துக்கு முன்பாக சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தென்ஆப்பிரிக்காவுடன் இன்னும் ஒப்பந்தம் கையொப்பம் ஆகாமல் உள்ளது; அதேபோல், நமீபியாவில் இருந்து வர வேண்டிய சிவிங்கிப் புலிகளின் தனிமைப்படுத்துதல் காலம் இன்னும் நிறைவடையவில்லை. இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பா் தொடக்கத்தில்தான் இக்காலம் நிறைவடையும். இதனால், சிவிங்கிப் புலிகள் இந்த மாதத்துக்குள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவில் சிவிங்கிப் புலி இனம் முற்றிலும் அழிந்துபோனதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது. இந்திய காடுகளில் அந்த இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, தென்ஆப்பிரிக்கா, நமீபியாவிலிருந்து கொண்டுவரப்படவிருக்கும் சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேச மாநிலம், சியோபூரில் உள்ள குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

உலக அளவில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.