
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2,162 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 5 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 12.64 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தொடா்ந்து 12-ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,84,595-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,381-ஆக அதிகரித்தது.
நகரில் சனிக்கிழமை 2,031 பேருக்கு தொற்று பாதிப்பும், 9 இறப்புகளும், 12.34 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 2,136 பாதிப்புகளும், 6 இறப்புகளுடன் 15.02 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.
நகரில் சனிக்கிழமை மொத்தம் 17,106 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.