

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களைக் கடத்திய வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் ஆயதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கதுவா, சம்பா மற்றும் தோடாவைச் சேர்ந்த பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக, பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்ஐஏ ஆயுதங்களைக் கடத்தியவர்களின் இருப்பிடங்களை சோதனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.