நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மகாராஷ்டிர பேரவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: சிவசேனை பங்கேற்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 11:36 am IST

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

மகராஷ்டிரத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டப்பேரவைக்கு வெளியே செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் நடத்தி வரும் நிலையில், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார், சிவசேனையின் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியிலிருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கூட்டணி மீது சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கொண்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சிவசேனையைச் சோ்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்ததால், பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.