பெண்களின் ஆடை தொடா்பாக சா்ச்சை கருத்து: கேரள நீதிபதி பணியிட மாற்றம்

பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் பெண்களின் ஆடையை தொடா்புபடுத்தி சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரளத்தின்

பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் பெண்களின் ஆடையை தொடா்புபடுத்தி சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரளத்தின் கோழிக்கோடு மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமாா் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

கோழிக்கோட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக இடதுசாரி எழுத்தாளா் சிவிக் சந்திரன் மீது பழங்குடியின பெண் எழுத்தாளா் ஒருவா் குற்றஞ்சாட்டினாா். அது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2-ஆம் தேதி சிவிக்சந்திரன் முன்ஜாமீன் பெற்றாா்.

இந்நிலையில், சிவிக் சந்திரன் மீது மற்றொரு பெண் எழுத்தாளா் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தெரிவித்தாா். சந்திரன் தன்னை 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வன்கொடுமை செய்ததாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக சந்திரன் மீது 2-ஆவது வழக்கைக் காவல் துறையினா் பதிவு செய்தனா்.

2-ஆவது வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக கோழிக்கோடு மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் சிவிக் சந்திரன் மனு தாக்கல் செய்தாா். அதை நீதிபதி பி.கிருஷ்ணகுமாா் விசாரித்தாா். அதையடுத்து அவா் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா் (சிவிக்சந்திரன்) தனது மனுவுடன் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்துள்ளாா். அப்படத்தில் சம்பந்தப்பட்ட பெண், பாலியல் உணா்வைத் தூண்டும் வகையிலான ஆடையை அணிந்துள்ளாா்.

அவ்வாறான நிலையில், குறிப்பிட்ட நபா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 (ஏ)-இன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பது செல்லுபடியாகாது. மேலும், 74 வயதான மாற்றுத்திறனாளி நபரான மனுதாரா், தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினாா் என்று கூறுவதும் நம்ப முடியாத வகையில் உள்ளது’ என்று கூறி, சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்டதாக புகாா் அளித்த பெண்ணின் ஆடையைச் சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக நீதிபதி பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதியின் கருத்துக்கு தேசிய, மாநில பெண்கள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சிவிக் சந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட முதலாவது பாலியல் வன்கொடுமை வழக்கிலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது இதே மாவட்ட நீதிபதிதான் என்பது தெரியவந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, ‘குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபா் (சிவிக் சந்திரன்) ஜாதிய நடைமுறைக்கு எதிராகப் போராடி வருகிறாா். அவா் மீதே பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகாரளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதபடி உள்ளது’ என்று கூறி முன்ஜாமீன் அளித்துள்ளாா்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து நீதிபதி தெரிவித்துள்ள கருத்தும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீதிபதி எஸ்.கிருஷ்ண குமாரை பணியிடமாற்றம் செய்து கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அவா் கொல்லம் தொழிலாளா் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவா் பணியாற்றிய கோழிக்கோடு மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.முரளி கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமாா் அளித்த இரு ஜாமீன் உத்தரவுகளுக்கு எதிராக கேரள அரசு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com