புது தில்லி: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையில் என்ன கிடைத்ததென்று நாட்டுக்குச் சொல்லுங்கள் என பாஜக தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
தில்லி முதல்வரும், கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிபிஐ சோதனையில் என்ன கிடைத்தது என்று வாசகம் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர்.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்குகள் பதிவு செய்யவும், கேஜரிவால் தலைமையிலான அரசுக்குக் களங்கம் விளைவிக்கவும் பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு சிபிஐயை பயன்படுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்தது முதல் பாஜகவுக்கு அச்சம் வந்துவிட்டதாகவும், அதனால்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் விளைவிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்மு அபிராமியின் ஜாக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அதிர்ஷ்டமில்லாத டேவிட் மில்லர்..! பங்கேற்ற 12 ஐசிசி கோப்பைகளிலும் தோல்வி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

