அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியையும், அதன் மாநிலத் தலைமையையும் வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா வெள்ளியன்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்து மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை மற்றும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் விவாதித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜக நாடாளுமன்றக் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டது. கர்நாடகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நல்ல செய்தியை அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மத்திய தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தனது செயல்பாடுகளைத் தொடருவேன், செப்டம்பர் முதல்வ வாரத்திலிருந்து மாநிலம் முழுவதும் பயணம் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பாஜக மற்றும் மாநிலத் தலைமையின் கரங்களை வலுப்படுத்துவேன் என்றார்.
ஆனால், கர்நாடக முன்னாள் முதல்வர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சித் தொண்டர்களுடன் உரையாடி, வருங்காலத் தலைவர்களை அடையாளம் காண்பேன் என்றார்.
மற்ற கட்சிகளிலிருந்து வரும் நல்ல தலைவர்கள் தங்கள் கட்சியில் சேரும் எண்ணத்தை பாஜக வரவேற்கிறது என்றார்.