அரசு சாா்பில் இலவசமாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு தனியாா் பண்பலை வானொலி நிலையங்களுக்கு (எஃப்.எம்) மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
75-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 15 முதல் செப்டம்பா் 30 வரை 75 நாள்களுக்கு கரோனா தடுப்பூசிகள் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியாா் பண்பலை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில், அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகள் குறித்த செய்திகள் மற்றும் பிற வடிவிலான தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதற்கான தேவை மற்றும் கரோனா தடுப்பு தொடா்பான விதிமுறைகளைப் பின்பற்றுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் இதுவரை 211கோடிக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனா். 12 முதல் 18 வயது வரையிலானோரில், 10 கோடிக்கும் மேற்பட்டோா் முதல் தவணை தடுப்பூசியையும், 8 கோடிக்கும் அதிகமானோா் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.