பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் பிகாரில் ஆட்சியமைத்துள்ளார் நிதீஷ் குமார். பிகாரில் ஏற்பட்ட இந்த திடீர் அரசியல் திருப்பம் நாடு முழுவதும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. நிதீஷ் குமாரின் இந்த அரசியல் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வை புதன்கிழமை பிகாரில் சந்தித்துப் பேசினார். பாட்னாவில் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் முயன்றுவரும் சூழலில் சந்திரசேகர் ராவ், நிதீஷ் குமார் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரியோவின் ராம் அண்ட் லீலா ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி!

மன்னிக்க முடியாது... பிரபுதேவாவை விமர்சித்த பிரபல நடிகை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



