தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது: முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் இத்தொழில்நுட்பத்தில், பயணிகள் அளிக்கும் தகவல்கள் ரகசிய குறியீடு வடிவிலான தரவுகளாக சேமிக்கப்படும். தகவல் திருட்டு, தன்மறைப்பு உரிமை உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இத்தொழில்நுட்பம் ஹைதராபாத், புணே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படும். இத்தொழில்நுட்பம் உள்நாட்டு விமானசேவையைப் பயன்படுத்தும் விமான பயணிகளுக்கானது.