தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வருகின்றது. மிகவும் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
காலை 9.30 மணி நிலவரப்படி:
ஆம் ஆத்மி 109
பாஜக 105
காங்கிரஸ் 9