இடைத்தேர்தல்: முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் முன்னிலை

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. 
இடைத்தேர்தல்: முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் முன்னிலை
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. 

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

அதுபோல உத்தர பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவ் மறைவையொட்டி மெயின்புரி மக்களவைத் தொகுதி  இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். 

கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் மெயின்புரி தொகுதிக்கான வாக்கு எண்ணிகையும் இன்று(டிச. 8) நடைபெறுகிறது. 

இதில், பாஜக வேட்பாளர்கள் ரகுராஜ் சிங்கைவிட டிம்பிள் யாதவ் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதனால் அவர் மெயின்புரி தொகுதியைக் கைப்பற்றுவது உறுதியாகிறது. 

மெயின்புரி மக்களவைத் தொகுதியை சமாஜவாதி தொடர்ந்து கைப்பற்றுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com