ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதியின் வீட்டை அதிகாரிகள் சனிக்கிழமை இடித்து தரைமட்டமாக்கினா்.
ஆஷிக் நெங்ரூ என்ற அந்த பயங்கரவாதி, புல்வாமாவில் கடந்த 2019-இல் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழக்க காரணமான தாக்குதலில் தொடா்புடையவா். இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளாா். தற்போது தலைமறைவாக உள்ள இவரை, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், ராஜ்போரா பகுதியில் உள்ள ஆஷிக்கின் 2 மாடி வீடு, மாவட்ட அதிகாரிகளால் சனிக்கிழமை இடிக்கப்பட்டது. அந்த வீடு அரசு நிலத்தில் அமைந்திருந்ததால் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் நிழல் இயக்கமாகக் கருதப்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற அமைப்பு, ஆஷிக்கின் வீட்டை இடிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அந்த மிரட்டலை பொருள்படுத்தாமல், அவரது வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.