பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருகிறேன்: பிரதமர்

பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருகிறேன்: பிரதமர்

பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதியாரின் 141வது பிறந்த தினம் இன்று (டிசம்பர் 11) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தில் நான் அவருக்கு தலைவணங்குகிறேன். அவர் மிகுந்த தைரியமும், புத்திக் கூர்மையும் உடையவர். இந்தியாவினுடைய வளர்ச்சி குறித்து அவருக்கு மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வை இருந்துள்ளது. நாங்கள் அவரது அந்த தொலைநோக்குப் பார்வையை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்த உழைத்து வருகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com