ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியின் துவாரகா மோர் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது. முகத்தில் பலத்த காயங்களுடன் மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அமில வீச்சால் மாணவியின் முகத்தில் 8 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கேஜரிவாலின் சுட்டுரை பதிவில்,
இதை சகித்துக்கொள்ள முடியாது. எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தில்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



